அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

22-12-2014

அரசாணை (நிலை) எண்.80

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாணவ, மாணவியரை 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்யும் பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

01-11-2014

அரசாணை (நிலை) எண்.101

சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் 2012-13 ஆம் ஆண்டிற்கான ரூ.1.00 கோடியை விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

17-10-2014

அரசாணை (நிலை) எண்.93

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2013-2014-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - 2 அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 5 அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

15-10-2014

அரசாணை (நிலை) எண்.86

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தற்போதைய மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-10-2014

அரசாணை (நிலை) எண்.66

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பதிவு பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் இதரப் பட்ட மேற்படிப்புகளுக்கு - ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்க - அனுமதி அளித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |